மனைவிக்கோர் மடல்
முன்குறிப்பு: இப்பதிவை கர்த்தர் ஒருவேளை எனக்கென்று ஒரு பெண்ணை எனது விலா எலும்பாக ஏற்கனவே முன்குறித்து வைத்திருந்தாரானால் அப்படிப்பட்ட என்னுடைய துணையானவளுக்கு, நான் எழுதக்கூடிய ஒரு மனந்திறந்த மடலாக பதிவிடுகிறேன். மேலும், இனி திருமணம் ஆகப் போகிறவர்களுக்கும் இப்போது புதிதாக திருமணம் ஆனவர்களுக்கும் அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டி இப்பதிவை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அன்புள்ள என் விலாவிற்கு, என்னால் நேசிக்கப்படப்போகும் பெண்மானும், அழகான வரையாடும் போலிருக்கப்போகும் என் இளவயதின் மனைவிக்கு, கர்த்தரின் நாமத்தினாலே ஸ்தோத்திரம். சற்றே சந்தேகமாய் தோன்றலாம் இளவயதின் மனைவி என்றால், அப்போது முதிர்வயதில் நான் மனைவியாயிருக்க மாட்டேனா என்று. அப்போது நீ எனக்கு நல்ல தோழியாகவோ அல்லது எனக்கு இரண்டாவது தாயாகவோ அல்லது குடும்பத்தார் அனைவருக்குமான தேவதையாகக் கூட இருக்கலாம். 'தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்' என்கிற வசனத்தின்படி நாம் தொடங்கப்போகும் வாழ்வுக்காக கிறிஸ்துவுக்கு கோடி நன்றிகள். 'முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது' என்கிற வசனத்தின்பட...