இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிராயுதமாய் - நீரே ஆயுதமாய்

படம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நிராயுதபாணிகளான எங்களுக்கு நீரே ஆயுதமாய் வந்தீரே, உமக்கு கோடாக்கோடி நன்றிகள் என்று என்றைக்கேனும் நாம் அவருக்கு நன்றி சொல்லி அவரை மகிமைப் படுத்தியிருப்போமா? " உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் " என்று, பல கஷ்டங்கள், நிந்தைகள் & அவமானங்கள் பட்டுவிடுவோமோ இப்படி புருஷனை அறியாமலே பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியாகி விட்டோமே என்றெல்லாம் யோசித்துக் கலங்கிப் பின்னர் கணவனான யோசேப்பும் அதனை அறிந்து புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு குடிமதிப்பு எழுதப்போகும் வழியில் சத்திரத்தில் தங்க இடமில்லாமல் பிரசவித்து மாட்டுத் தொழுவத்தில் குழந்தையை கிடத்தி, பின்னர் எட்டாம் நாளிலே தேவாலயத்திற்கு தூக்கிவந்த குழந்தை இயேசுவை குறித்து அவரது தாயாகிய மரியாளை நோக்கி சிமியோன் தீர்க்கதரிசி இப்படி சொல்கிறார்.   அந்நேரத்தில் ஒரு தாயினது மனது எவ்வளவாய் கலங்கியிருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்களேன், கர்த்தர் ஆபிரகாமுக்குக் கூட ஈசாக்கை சற்றே வளர்ந்த பின்னர்தான் பலியிட வேண்டுமென கேட்டார், ஆபிரகாமுங்கூட சிறிதளவேனும் அப்போது மனம் கலங்கித்தான் போயிருப்பார்...

தேர்ந்தெடுக்கப்படுதல் - தெரிந்தெடுக்கப்படுதல்

கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.! நீங்களோ நானோ இப்பொழுது கிறிஸ்தவராய் இருப்பதற்கு காரணம் யாரென்றோ எதுவென்றோ கேட்டால் நாம் பலவற்றை கூறமுடியும், ஆனாலும் அதிலெல்லாவற்றிலும் முதன்மையானது ஒன்றே ஒன்றுதான் அது, கர்த்தரால் நாம் தேர்ந்தெடுக்கப் பட்டதாலோ அல்லது தெரிந்தெடுக்கப் பட்டதாலோ தான். எப்படியும் இவ்விரண்டில் ஒன்றுதான் பதிலாக இருக்கமுடியும். நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்று சொல்வோமேயாகில், நமக்கு என்ன தகுதி இருக்கின்றது என்பதை நாமே நிதானித்து பார்ப்போம். அல்லது தெரிந்தெடுக்கப்பட்டோம் என்று சொல்வோமானால் நாம் என்ன வேதத்தில் சொல்லப்பட்ட தேவமனிதர்களை விடவும் அவ்வளவு நல்லவர்களா இல்லை பெரிய விசுவாச வீரர்களா இல்லை  மிகவும் அதிகமாக தேவனோடு சஞ்சரித்தவர்களா, இதில் எதிலுமே நாம் நம்மை பொருத்திப்பார்க்கக்கூட தகுதி அற்றவர்கள் என்பதே உண்மை. ஆயினும் கர்த்தர் நம்மேல் வைத்த மாறாத அன்பினாலும்  தூய தயவினாலும் அவரது ஒப்பற்ற அளவற்ற கிருபையினாலுமே அவரால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டும் தெரிந்தெடுக்கப்பட்டும் இருக்கிறோம். இங்கு நான் இரண்டையுமே குறிப்பிடுவதற்கு காரணம், க...

எனது ஜெபங்கள்-1

"நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது" என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு முறைமையை மத்தேயு 6-ஆம் அதிகாரத்தில் கற்றுத் தந்திருக்கிறார், இருப்பினும் நாம் அனைவருமே நமது ஜெபங்களுக்குப் பிறகு அனைவரும் சேர்ந்து சொல்லக்கூடிய ஒரு பொதுவான இறுதி அறிக்கையாகத்தான் அந்த 'பரமண்டல' ஜெபத்தை ஏறெடுத்து வருகிறோம். நான் இங்கு நாம் அவ்வாறு செய்வதைப்பற்றி குறைசொல்லவில்லை அது தவறா இல்லையா என்பதை பற்றிய ஆராச்சியாகவும் இப்பதிவினை பதிவிடவில்லை.  கர்த்தரே "என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்" என்றும் நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். எனவே இப்பதிவில் நானும் எந்தமாதிரியான காரியங்களுக்கு எவ்வாறெல்லாம் ஜெபிப்பேன் என்பதை பதிவிடுகிறேன். படிக்கின்ற உங்களுக்கு அதில் ஏதேனும் மாற்றுக்கருத்து அதாவது, இவ்வாறெல்லாம் ஜெபிப்பது கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குவதற்கு ஒப்பாகும் என்பதுபோல எண்ணம் வருவதுபோலான ஜெபத்தை நான் தவறாக  ஏறெடுக்கிறேனா என்பதை நீங்கள் தெரியப்படுத்துங்கள், மேலும் சரியாக இருப்பின் நீங்களும் அவ்வாறே ஜெபிக்க பழகுங்கள். பிரசங்கங்களுக்கு முன்: " சொல்லும்...