இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது ஜெபங்கள்-2

 எனது ஜெபங்கள்-1 அதிகாலை வேளையில்: "நன்றி ஆண்டவரே  இந்த  நாளை தந்ததற்காய் . இரவு முழுதும் நல்ல நித்திரை வரப்பண்ணி இந்த நல்ல நாளிலும்  அதிகாலை வேளையை தந்து என்னை துயில் எழுப்பிவிட்டு என்னை உமது சமூகத்தில் அமரச்  செய்தீரே  ஸ்தோத்திரம் .  இந்த நாளிலேதானே  'காலையிலே  உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன் , கர்த்தாவே  காலையிலே என் சத்தத்தை கேட்டருளுவீர் ' என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், 'நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்'  என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் , 'நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன் '  என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம்  , 'அதிகாலையிலே தேவன் சகாயம் பண்ணுவார்'  என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் , 'அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்கு காண்பியும்'  என்ற வார்த்தைக்காக ஸ்தோத்திரம், அதுபோலவே காலை யிலே எங்களை  உமது கிருபையால் திருப்தியாக்குகிறதற்காய் உமக்கு ஸ்தோத்திரம்.  'அதிகாலமே உம்மை தேடுகிறேன்' என்கிற வார்...