இரண்டு சகோதரர்கள்
வேதத்தில் நாம் பல இரு சகோதரர்களைப் பார்த்திருப்போம், அதிலும் இரட்டை சகோதரர்களாயும்கூட படித்துமிருப்போம். இப்பதிவில் அப்படிப்பட்ட இரண்டு இரு சகோதரர்களை அலசி ஆராய்வோம் ஒரு இருவரை பழைய ஏற்பாட்டிலும் மற்றொரு இருவரை புதிய ஏற்பாட்டிலுமிருந்தும் தொடர்புபடுத்தி காண்போம். முதலில் புதிய ஏற்பாடு, இந்த சகோதரர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் உவமையாக சொல்லப்பட்ட, காலங்காலமாக நம்மால் 'கெட்டகுமாரன்... கெட்டகுமாரன்...' என்று சொல்லப்பட்டு வரும் மனம்திருந்திய குமாரனின் கதையில் வரும் இரு சகோதரர்கள். இக்கதையின் சாராம்சம் நாம் அனைவரும் அறிந்ததே, நான் இங்கு குறிப்பிட விரும்புவது மனம்மாறிய இளையகுமாரனை பற்றி அல்ல அவனது அண்ணனான மூத்தகுமாரனைப் பற்றி. எனக்கும் முதலில் மூத்தகுமாரன் தன் தந்தையின்மீது கோவம் கொண்டது சரியென்றுதான் பட்டது. ஏனெனில் நானும் ஒரு அண்ணன் என்பதாலும், எனக்கும்கூட ஒரு தம்பி இருப்பதாலும். மூத்தவன் தன் தகப்பன் தனக்கு எதுவுமே செய்யவில்லை ஆனால் ஆஸ்தியை அழித்துப்போட்ட தனது தம்பி திரும்பி வந்ததுமே அவனுக்கு விருந்து செய்வித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் கோபம்கொண்டு தகப்பனி...